ரிஷப ராசி
ரிஷப ராசியின் குணங்கள்:- ரிஷப ராசி ராசிக்கட்டத்தில் 30′ முதல் 60′ டிகிரி வரை வியாபித்து இருக்கக் கூடிய இரண்டாவது ராசியாகும். இது உடல் உறுப்புகளில் முகத்தை குறிக்கக் கூடிய பெண் தன்மை கொண்ட, நில தத்துவ, ஸ்திர ராசியாகும். வானில் இது எருதின் உருவத்தை கொண்டது. இதன் நிறம் வெண்மை. ரிஷப ராசியின் அதிபர் சுக்ரனாகும். இந்த ராசிக்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்களும், ரோஹினி நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும், மிருகசீரிடம் 1,2 பாதங்களும் உள்ளது. சந்திரன் 33′ யில் உச்சமடைந்து மூலத் திரிகோணம் பெறும் ராசியாகும் இது. இதன் திசை தெற்கு. குணம் சௌம்யம். இந்து மத தத்துவத்தின் மனித வாழ்க்கையின் அடிப்படை இலக்குகளான நான்கு புருஷார்த்தங்கள் எனப்படும் தர்மம், கர்மம், காமம், மோட்சம், எனும் தத்துவங்களில் இது மனித கர்மத்தை, மனிதன் பொருளீட்டும் தன்மையை குறிக்கும் ராசியாகிறது.
ரிஷப ராசியின் காரகத்துவங்கள்:- நிலம், அழகு சாதனங்கள் உள்ள இடம், கழுத்து, புல்வெளிப் பகுதிகள், கஜானா, பெண்கள் தங்குமிடம், சுவையான உணவுப் பொருட்கள், இனிப்புகள் விற்குமிடம், இயல், இசை, நாடகம், கலைத் தொழில், கேளிக்கை விடுதிகள், விளை நிலம், மாட்டுத் தொழுவம், பங்களா, லாக்கர், முகம், வீதியின் நடுப்பகுதி, ரகசிய அறைகள், படுக்கை அறை, ஆபரணஙகள், கர்ப்ப கிரக வாயில் போன்றவை இந்த ராசியின் முக்கிய காரகத்துவங்கள் ஆகும்.
ரிஷப ராசியினர் குணங்கள்:- ரிஷப ராசியினர் (சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள்) பொறுமை, விடாமுயற்சி, மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் சிறந்த கலை ரசனை கொண்டவர்கள். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல், இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதிலும், உறவுகளுக்கு உண்மையாக இருப்பதிலும் முன்னணியில் இருப்பார்கள். அழகான பொருட்கள், இசை மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் மீது மிகுந்த நாட்டம் உடையவர்கள். எளிதில் கோபமடைய மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து சோதித்தால் மிகக் கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஒரு விஷயத்தில் முடிவு செய்துவிட்டால், அதை மாற்றிக்கொள்ள மிகவும் தயங்குவார்கள். பண விஷயத்தில் கவனமாகச் செயல்படுவார்கள். சேமிப்பு மற்றும் முதலீடுகளில் சிறந்த அறிவைக் கொண்டிருப்பார்கள்.
தோற்றம் :- ரிஷப ராசிக்காரர்களின் கைகள் தடித்து காணப்படும். கை விரல்கள் சிறியதும், பெரியதுமாக இருக்கும். பெரிய விரலை விட மோதிர விரல் நீண்டு காணப்படும். இவர்களது நாக்கில் உண்மை இருக்கும். எதைச் சொன்னாலும் பலிக்கும்.
பண அந்தஸ்து:- இந்த ராசியில் பிறந்தவர் வேலையில் முழு மனதுடன் உழைப்பவர், பணத்தை கடவுளாக நினைப்பவர். இவரிடம் பணம் தங்காது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அவ்வளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர், மற்றவரிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துபவர். இதனால் இவர் சுயநலவாதியாக இருக்கிறார். ரிஷப ராசிகாரர்கள் பணக்காரனாக முடிவதில்லை. இறுதியில் இவர் இறை கருணையால் நினைத்த காரியங்களை வெற்றியோடு முடிப்பார். மக்களின் நடுவில் நற்பெயருடன் இருப்பர். கடவுள் நம்பிக்கையுடன் அனைத்து காரியங்களையும் வெற்றியுடன் முடிப்பார்.
காதல் உறவு :- ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
விருப்பங்கள் :- இந்த ராசிகாரார்களின் பொழுது போக்கு புத்தகம், படித்தல், விளையாடுதல், நல்ல பொருட்களை உருவாக்குதல், பாடுதல், கதை எழுதுதல் இவற்றில் எதை செய்தாலும் அதில் நினைவு கூர்நது செய்வர். ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவராகவும், ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் ஆடைகளை அழகுபடுத்துவதில் ஆர்வம் உள்ளவராக இருப்பர்.
சொந்தத் தொழில்:- இந்த ரிஷப ராசி நேயர்களின் தொழில் அவர் அவர் பிறந்த தேதியைக் கொண்டு தான் தொழில் செய்ய வேண்டும். இருந்தாலும் துணி வியாபாரம் செய்தால் அதிக லாபம் பெறலாம். இந்த ராசிக்காரர்கள் வீரர்களாகவும் இருப்பர்.
நட்பு:– ரிஷப ராசிகாரர்களுடன் ரிஷபம், மிதுனம், மகரம், கன்னி, கும்பம் ராசிகாரர்கள் அன்பான நண்பர்களாவர். கும்ப ராசிகாரர்கள் இவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவர். இவர்கள் ரிஷப ராசி நேயர்களுக்கு உண்மையான நண்பராவர். மேஷ ராசிகாரார்களும் இவர்களுக்கு நண்பராகிறார். சிம்ம ராசிகாரர்கள் தொல்லை தரக் கூடியவர்கள். விருச்சக ராசிகாரர்கள் தேளின் தன்மை வாய்ந்தவர். மகர ராசிகாரர்கள் கல்வியில் உயர்ந்த லாபம் தரக்கூடிய நண்பனாவர். சிம்மம், கும்பம் ராசிகாரர்களிடம் அதிக நட்பு கிடையாது- மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிகள் ரிஷப ராசிக்கு நன்மை கிடையாது.
இல்லற வாழ்க்கை :- இந்த ராசிக்காரர்களுக்கு விருச்சக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். அதேபோல கன்னி ராசி காரர்களுடன் வாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள். சிலருக்கு துன்பம் நிலவிக் கொண்டிருக்கும்.
வீடு-குடும்பம் :- ரிஷப ராசி காரர்களுக்கு நல்ல தாய் தந்தை உள்ளனர். குழந்தைகளின் மனதில் நிறைந்த அன்பும் தைரியமும் நிறைந்திருக்கும் ரிஷப ராசி கன்னி பெண்களுக்கு சுகம் நிறைந்திருக்கும். ரிஷப ராசிகாரர்கள் மற்றவர்களின் பேச்சில் மயங்காதவர். அவரே சந்தோஷத்துடன் மற்றவரையும் சந்தோஷமாக வைப்பவர். இந்த ராசி காரர்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்தைப் பற்றி யோசனை செய்து, அதற்கான தீர்வு எடுத்து முடிப்பவர். பரம்பரை ஜமீன் தாரரை பார்த்து பயப்படுபவர் மற்றும் தூரம் செல்பவர். குடும்பத்தில் ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறார். பாரம்பரியத்தை பின்பற்றுபவர். வீட்டு விசேஷங்களில் தன்னை தனியாக வைத்தக் கொள்வார். இவர்கள் கம்பீரமாகவும், சக்திசாலியாகவும் இருப்பவர்கள்.
பண்பியல் தொகுப்பு :- ரிஷப ராசிக்காரர்கள் இன்பமாக வாழ வேண்டும் என்பதில் குறியாக இருப்பர். ஆனால் கடின உழைப்பாளியாகவும் இருப்பார்கள். எல்லோரையும் நேசிப்பதால் இவர்களது வாழ்க்கை அமைதியாகவே செல்லும். எதிலும் பொறுமை காட்டுவர். இதனால் இவர்களது வெற்றி தாமதமாகும். ஆனால் நிலையாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் :- ரிஷப ராசி நேயர்களுக்கு வயிற்று உபாதை உண்டு. வாயுக் கோளாறு, சர்க்கரை நோய், பார்வை கோளாறு, தொண்டை முதலிய நோய்களுண்டு. இவர்களுக்கு மாரடைப்பால் இறக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இவர்களுக்கு சுக்கிர திசை நடக்கும் போது எண்ணற்ற நோய்கள் வந்து சேரும். இவர்கள் நோயிலிருந்து தப்பிப்பதற்கு பழம், இளநீர், தக்காளி முதலியவற்றை உண்டு வரவேண்டும்.
அதிர்ஷ்ட நாள் :- இந்த ராசிகாரர்களுக்கு சனி மற்றும் புதன் கிழமை உன்னதமான நாள். இவர்கள் இந்த நாட்களில் எந்த காரியமும் வெற்றி உண்டாகும். பெளர்ணமி தினத்தில் வரும் நாட்களில் எந்த காரியமும் செய்தல் கூடாது.
அதிர்ஷ்ட நிறம் :- ரிஷப ராசிகாரர்களின் ராசியான நிறம் நீலம். நாவல்பழ நிறம். இந்த நிறமுடைய ஆடையை அணிவதின் மூலம் இவர்களுக்கு அமைதி நிலவும். வெள்ளை மற்றும் கருநீலம் நன்மை தரும். வெண்மை நிறம் இவர்களுக்கு வெற்றியை தரும். எனவே இவர்கள் அணியும் ஆடையில் வெண்மை நிறம் அவசியம் இருத்தல் வேண்டும்.
அதிர்ஷ்ட கல் :- ரிஷப ராசி நேயர்களுக்கான ராசிக்கல் வைரம். இந்த ராசிக்காரர்களுக்கு துன்பம் நேராமல் இருக்க வைரம் அணிய வேண்டும். இந்த கல்லை வெள்ளை தங்கத்தில் அல்லது வெள்ளியில் வைரக்கல் வைத்து அணிந்தால் சங்கடம் தீரும். வைரக்கல்லை சனிக் கிழமையில் சுப தினத்தில் அணிய வேண்டும்.